Wednesday, April 22, 2009

பாதம் ஒன்றே வேண்டும் கீர்த்தனை 172

பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்


சரணங்கள்
நாதனே துங்க மெய் -தேவனே ,பொங்குதற்
காதலுடன் துய்ய -தூதர் தொழுஞ் செய்ய -பாதம்

சீறும் புயலினால்- வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற் போல் -நீர் மேல் நடந்த உன்-பாதம்

வீசும் கமழ் கொண்ட -வாசனைத் தைலத்தை
ஆசையுடன் -மரி- பூசிப் பணிந்த பொற் -பாதம்

போக்கிட மற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் தூக்கி நடந்த நற் - பாதம்

நானிலத்தோர் உயர் -வான் நிலத்தேற வல்
ஆணி துளைத்திடத் -தானே கொடுத்த உன் -பாதம்

பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு- நாதனே என்றும் உன்-பாதம்




No comments:

Post a Comment