Monday, April 6, 2009

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் -இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில் .

அனுபல்லவி

மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் .

சரணங்கள்
யாக்கோபைப் lபோல் போகும் பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கி னாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டி ச் சேர்வேன் , வாக்கடங்கா நல்ல நாதா!-

பரத்துக்கேரும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே ,
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை யழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் .-

நித்திரை யினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் ;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டி ச் சேர்வேன் .-

ஆனந்தமாம் செட்டை விரித்து பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடுனும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

No comments:

Post a Comment