Tuesday, April 7, 2009

தந்தேன் என்னை இயேசுவே கீர்த்தனை 187

பல்லவி
தந்தேன் என்னை இயேசுவே ,
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்-

சரணங்கள்

ஜீவ் கால்ம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்.
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

உலகோர் என்னை நெருக்கிப
பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-

கஷ்ட நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-

உந்தஞ் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-

ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
அன்று சிஷர்க் களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் .

No comments:

Post a Comment