Monday, April 27, 2009

வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,கீர்த்தனை 286

பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர் ,பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி!-

சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம் சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய் ;
பொல்லாப் பேயின் மோசம் நின்றென்னைக் காத்தாய்-வினை

சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தனவானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதிதானேசென்றன ;
அடியேனும் பள்ளி கொள்வேனே ;-வினை

ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம் ;
ஜெகக் தின்பங்கள் விழைந்து சேர்த்தல் நிர்ப்பந்தம் ;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம் ;
பட்சம் வைத்தாள்வையேல் ,அதுவே ஆனந்தம்; -வினை

இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல்,உன் முத்தி தாராய்; -வினை
.

No comments:

Post a Comment