Tuesday, April 21, 2009

தீய மனதை மாற்ற வாரும் கீர்த்தனை 102

பல்லவி

தீய மனதை மாற்ற வாரும் , தூய ஆவியே , - கன
நேய ஆவியே .

சரணங்கள்

மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
பாவி நான் .- தீய

தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,- மருள்
தீர்க்கும், தஞ்சமே .- தீய

பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடி தான் ஐயா - ஒரு
பாவி நான் ஐயா ,-தீய

ஏக்கதோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே ,-தினம்
இதயம் அஞ்சவே .-

புதிய சிந்தை, புதிய ஆசை புதுபித்தாக்கவே,- அதைப்
புகழ்ந்து காக்கவே,- தீய

கிற்ஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
கிருபை தேடவே.- தீய

தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே,-மிகு
தெளிவு வேண்டவே.- தீய

ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்து போற்றவே, மிக சிறப்பாய்
ஏற்றவே,- தீய

No comments:

Post a Comment