Monday, April 13, 2009

இவரே பெருமான் கீர்த்தனை 75

இவரே பெருமான் மறற
பேர் அளவே பூமான், -இவரே பெருமான்

சரண்ங்கள்
கவலைக் கிடங்கொடுத் தறியார்,- வேறு
பவவினை யாதுமே தெரியார் ,இப்
புவன மீது நம்க்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம்,-பவ
கரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பவபிணி தீர்க்கும் பரிகாரி,-சொல்லும்
வல்லமையில் மிக்க உபகாரி- எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு
மறம் விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே
இறந்தோர்க் குயி ரீயும் கர்த்தன்

அலகை தனை ஜெயித்த வீரன் ,-பல
உலகை ரட்சித்த எழிற் பேரன், விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்.

பொன்னுலகந் தனில்வாழ் யோகன், அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் , நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன்.-

No comments:

Post a Comment