Tuesday, April 7, 2009

ஆவியை மழை போலே யூற்றும் கீர்த்தனை 98

பல்லவி
ஆவியை மழை போலே யூற்றும் -பல
ஆடுகளை ஏசுமந்தையிற் ம்ந்தையிற் கூட்டும்

அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனை விட்ட கி றிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கி டச் செய்யும் .-

சரணங்கள்
அன்பினால் ஜீவனை விட்டீர் ;- ஆவி
அருள் பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலேபொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும் .-

சிதறுண்டலைகிற ஆட்டைப பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து ,
பதறாதே நான் தான் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கை யருளும் .

காத்திருந்த பல பேரும் - மன்ங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்

தோத்திர கீதங்கள் பாடி எங்கும்
சுவிஷேச ஜெயததையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேக ரெழும்ப
பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும்


No comments:

Post a Comment