Monday, April 20, 2009

யேசு நசரையீ னதிபதியே கீர்த்தனை 84

யேசு நசரையீ னதிபதியே ,-பவ நரர் பிணை யென வரும் .

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே ம்கத்துவ

சரணங்கள்

இந்த உலகு சுவை தந்து போராடுதே ,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி பாவியகம் நோயினில் வாடுதே .-



நின் சுய பெல னல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் , தவற விடாது ,
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

கிருபை யுடன்என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்;
பொன்னுலோகமதில் என்னையும் சேரும்

No comments:

Post a Comment