Thursday, April 23, 2009

வாரா வினை வந்தாலும் சோராதே,மனமே கீர்த்தனை 203

பல்லவி
வாரா வினை வந்தாலும் ,சோராதே ,மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்லதாரகமே

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே .- வாரா

பெற்ற பிதாப் போல் உன் குற்றம் எண்ணாதே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே .- வாரா

தன் உயிர் ஈந்திட்ட உன் ஏசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே, நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையே?
வானவனை முற்றும் தான் அடைவாயே ! - வாரா

No comments:

Post a Comment