Sunday, April 19, 2009

நீயுனக்குச சொந்தமல்லவே ; கீர்த்தனை 131

பல்லவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே; மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே.

அனுபல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே ;
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் .

சரணங்கள்
சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே, திருரத்தம் , ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே;-

இந்த நன்றியை மறந்து போனாயோ ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ ?
சந்த தமுன திதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடை யதல்லவோ ?-

பழைய பாவத்தாசை வருகுதோ ?பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக் கடல் தள்ளுவானேன் ? -

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகை விட்டுப்
பிரியினும் அவர்கே மரிப்பாயே ,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் .-

No comments:

Post a Comment