Friday, April 3, 2009

பவனி செல்கிறார் ராசா

பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!



அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,-



சரணங்கள்
எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின் ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !-




பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.-



குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருந்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

No comments:

Post a Comment