Wednesday, April 29, 2009

திரிமுதல் கிருபாசனனே, சரணம் கீர்த்தனை 2

திரிமுதல் கிருபாசனனே, சரணம் !

ஜெக தல ரட்சக தேவா ,சரணம் !

தினம் அனுதினம் சரணம் ;-கடாட்சி!

தினம் அனுதினம் சரணம் , -சருவேசா !

நலம் வளர் ஏக திரித்துவா ,சரணம் !

நமஸ்கரி உம்பர்கள் நாதா ,சரணம் !

நம்பினேன் இது தருணம் ; தருணம் ,

நம்பினேன் ,தினம் சரணம் - சருவேசா!

அருவுருவே , அருளரசே ,சரணம் !

அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்

அதிகுணனே,தருணம் -கிரணமொளிர்

அருள் வடிவே ,சரணம் -சருவேசா !

உலகிட மேவிய உனதா -சரணம் !

ஓர் கிருபாசன ஒளியே ,சரணம் !

ஒளி அருள்வாய் ,தருணம் - மனுவோர்க் கு

உத்தமனே ,சரணம் -சருவேசா

No comments:

Post a Comment