Thursday, April 2, 2009

குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வாடிய
கொல்கதா மலை தனிலே
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ!-தீயர்
திருக்கரங்களில் ஆணிகளடித்தார்,
சேனை திரள் சூழ .-

பாதகர் நடுவில் பாவியிநேசன்
பாதகன் போல்தொங்க ,- யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
ப்டுத்திய கொடுமை தனை


சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையா-தேவ சுந்தர
மைந்தனுயிர் விடு காட்சியால்
துடிக்கா நெஞ் சுண்டோ?



ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன்விலாவதிலே,- அவர்
அதகன் தீட்சை குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது, பார் -

எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ - தொன்
கொடுமின் இள மண வாளன்
எடுத்த கோலமிதோ?-











No comments:

Post a Comment