Thursday, April 23, 2009

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் கீர்த்தனை 260



பல்லவி

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? -அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்.

அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் .-

சரணங்கள்

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்

எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய

பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே

வருந்தின சீடர்க்காய் மருகி நின்றாரே-அதிசய

வியாழ னிரவில் வியாகுலத்தோடே

விளம்பின போதகம் மறந்திடலாமோ?- அதிசய

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே

முடிவு பரியந்தம் நிலைப்பிரென்றாரே.- அதிசய

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி

மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே-அதிசய

No comments:

Post a Comment