Wednesday, April 22, 2009

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் கீர்த்தனை 189

பல்லவி
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ,யேசுவே.

அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதிமுன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது ,இப்போது - என்னை
சரணங்கள்
அந்தகாரத்தி னின்றும் ,பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் .-

ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதாய்க் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணை செய் , தேவா .-

நீதியி னயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றேன் சரீரத்தை .-



No comments:

Post a Comment