Saturday, April 4, 2009

எழுந்தார் இறைவன்

பல்லவி
எழுந்தார் இறைவன் ,-ஜெயமே
எழுந்தார் இறைவன்

சரணங்கள்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க- கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க ,- இப்
பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க -உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க .-

விழுந்தவரை கரையேற்றப் பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற -
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற

கருதிய காரியம் வாய்க்க்த் -தேவ
சுருதி மொழிகளெ ல்லாம் காக்க -நம்
இரு திறத்தாரையும் சேர்க்க -

No comments:

Post a Comment