Wednesday, April 22, 2009

வாரும் ஐயா போதகரே கீர்த்தனை 173

வாரும் ஐயா போதகரே ,
வந்தெம்மிடம் தங்கியிரும் ;
சேரும் ஐயா பந்தியினில்
சிரியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாரும் ஐயா !
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் .

நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க ,
தாமதமேன் தயை புரிய
தற்பரனே ,நலம் தருவாய்


உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்

No comments:

Post a Comment