Saturday, April 25, 2009

பாடித் துதி மனமே கீர்த்தனை 19

பல்லவி
பாடித் துதி மனமே ;பரனைக் கொண்டாடித்
துதி தினமே .

அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து -பாடி

சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக- பாடி

எத்தனை தீர்க்கர் ,அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் ,இரத்த சாட்சிகள் ,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் -பாடி







No comments:

Post a Comment