Tuesday, April 7, 2009

ஆவியை அருளுமே, சுவாமீ கீர்த்தனை 99

பல்லவி
ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்
நற்கனி தேடிவருங் காலங்களல்லவோ?
நானொரு கனியற்ற பாழ் மர மல்லவோ
முற் கனி முக் காண வெம்பயி ரல்லவோ?
முழு நெஞ்சம் விளை வற்ற உவர் நில மல்லவோ ?

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பரம் சந்தோஷம் , நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம் , தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை .-

தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊறறும்
திரி யவியாமலேதீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்த வரந் தந்தென் குறைகளைத் தீரும்

No comments:

Post a Comment