Saturday, April 11, 2009

யூத ராஜ சிங்கம் கீர்த்தனை 324

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிரித்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.-

சரணங்கள்
வேதாளக் கனங்கள் ஓடிடவே.
ஓடிடவே,உருகி வாடிடவே.-- யூத

வானத்தின் சேனைகள் துதித்திடவே ,
துதித்திடவே பரனைத் துதித்திடவே .-யூத

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்ட்ன,
தெறிபட்டன, நொடியில் முறி பட்டன . -யூத

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே ,பயத்தை என்றும் நீக்குதே.- யூத

மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அக மகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்-யூத

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை ,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை .- யூத

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் ,
பாதம் பணிவோம், பதத்தை ச சிரமணிவோம்.

No comments:

Post a Comment