Friday, October 30, 2009

பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை
நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்

எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்

வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,
ஆனா பல் கந்தை என்ன பாடோ ?-பெத்

அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,
இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்

ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்

No comments:

Post a Comment