Friday, October 30, 2009

மங்களம் ஜெயமங்களம்! கீர்த்தனை 319

பல்லவி

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

ச்ரணங்கள்

எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்

நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்

சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்

இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

No comments:

Post a Comment