Wednesday, September 2, 2009

இயேசு நான் நிற்கும் கனமளையே கீர்த்தனை 183

பல்லவி

இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மாற்ற

எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .

சரணங்கள்

இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன்

எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;

நேசனையுங் கூட நம்பேன்.-நான்

இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்

உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;

உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்

உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு

பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்

பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;

இருதயத்தின் நிலை அசைய -அப்போ

தேசுவே என் முழு நம்பிக்கையாமே.-இயேசு

சோதியாய் அவர் வரும் போது-நான்

சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ;

நீதியாம் ஆடை தரிப்பேன் ,-சதா

நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் - இயேசு

No comments:

Post a Comment