Friday, April 3, 2009

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுர மாமே ;-
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே .

காசினிதனிலேநேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;- பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத தொலைத்தார்; கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;- பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே .

காலையில் பனி போல் மயமாய் யாவும் உபாயமாய் நீங்கிவிடும் ;
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் ; -நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துணைக் காப்பார்; ஆசைகொள் நீ மனமே ;-

பூலோகத்தாரும் மேலோகத்தரும் புகழ்ந்து போற்று நாமம் ;அதைப்
பூண்டு கொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

1 comment: