Monday, April 20, 2009

ஏற்றுக் கொண்டருளுமே தேவா கீர்த்தனை 208

பல்லவி
ஏற்றுக் கொண்டருளுமே , தேவா,- இப்போ
தேழையேன் ஜெபத்தை யேசுவின் மூலம்.

சரணங்கள்

சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும் ,
சந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும் ,
தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி .-

குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே ,
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுவதும் மேசியா மேல் வைக்கிறேன் ஸ்வாமி .-

மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி ,
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி ,
தேற்றிடும் புது பெலன் ஊற்றிடும் , ஸ்வாமி

விசுவாசம் பெருகி நிலத்திடச் செய்யும் ,
வெளிப்படும் மறை பொருள் பலப்படச் செய்யும்
சிசுவைப் போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

1 comment:

  1. Beloved in Christ,
    praise the lord. your blog is very useful and the need for the time. as a tamilchristian i invite u to join with us in www.tamilchristians.com. mail me arputhaa@yahoo.co.in

    ReplyDelete