Wednesday, April 14, 2010

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1 . வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை

2 .பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவருமென்னை - என்னை

3 .தாய் தன சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை

4 .உன்னை தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே - என்னை

5. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வைத்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னை

என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே - என்னை

1 comment: