Monday, April 19, 2010

வேறு ஜென்மம் வேண்டும் கீர்த்தனை 122

பல்லவி
வேறு ஜன்மம் வேண்டும் ,- மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

சரணங்கள்
கூறு பரிசுத்தர் மாறில்லா தேவனின்
தேறுதலான வின்பெறு பெற இங்கே.- வேறு

பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய -வேறு

மானிடரின் அபிமானத்தினாலல்ல ,
வானவரின் அருள் தானமாக வரும் ;- வேறு

ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய ;- வேறு

மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே ,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள். - வேறு

மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும் ,
விண்ணினில் தூயராய் தண்ணனி கொள்ளவும் -வேறு

No comments:

Post a Comment