Saturday, April 24, 2010

ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார் ;
ஆதந் தன பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய் ,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் ,
மின்னுச்சீர் வாசகர் , மேனி நிறம் எழும்
உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ,ரஞ்சிதனார் ,
தாம் தாம், தன்னரர வன்னரர்
தீம், தீம் தீமையகற்றிட
சங்கிர்த, சங்கிர்த ,சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட -ஆதி

சரணங்கள்
ஆதாம் சாதி ஏவினர் ;ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் .-ஆதி

பூலோகப் பாவ விமோசனர் ,பூரண கிருபையின் வாசனர் ,
மேலாக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் ,-ஆதி

அல்லேலுயா ! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே,
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் .-ஆதி

No comments:

Post a Comment