Friday, April 16, 2010

உச்சித மோட்ச பட்டணம் போக கீர்த்தனை 235

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே ;- அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு , ஓயா இன்பமுண்டு ,

சரணங்கள்

சித்தச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் -எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். - உச்சித

அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்;- அங்கே
இன்பங்க்ல்களுண்டு; இயேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே - உச்சித

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்; -அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறிவோம்- உச்சித

No comments:

Post a Comment