Wednesday, April 28, 2010

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, கீர்த்தனை 65

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி வாருமேன்,
ஸ்வாமி, வாருமேன் ,-இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் ,- சாலே

சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே -இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ? - சாலோ

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப்
போகுதே ;--நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே-சாலே

நங்கை எருசலேம்பட்டினம் உமமைநாடித் தேடுதே ;-இந்த
நானிலத்திலுள்ள ஜீவபிராணிகள் தேடிவாடுதே - சாலே

சாட்சியாக சுபவிசேஷம் தாரணி மேவுதே ;உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிகூவுதே -சாலே

3 comments:

  1. இந்த கவிசஞர்களைக் குறித்து ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete
  2. Inforation about these authors will e posted in http://tamilgospelsongs.blogspot.com/

    ReplyDelete
  3. also can you tell me in which situation these songs were written and composed.

    for e.g yesuvaiye thuthi sei ws sung by saasthriyar when saraboji asked him to sing a song on the king himself, but saasthriyar sang this song...

    ReplyDelete