Friday, April 23, 2010

அந்த நாள் பாக்கிய நாள் கீர்த்தனை 120

பல்லவி
அந்த நாள் பாக்கிய நாள் -நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள் .

அனுபல்லவி
அந்த நாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத் தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் -அந்த

சரணங்கள்
அன்றே என்க்குப் போதித்தார் ,-அவர் வழியில்
அனுதினம் செல்லக் கற்பித்தார் ;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர்,எங்கும் எடுத்துரைப்பேனே .-அந்த

என்றனை அன்றே எழுத்தார் -தமதன்பினால்
இசைவாயத் தம் முடன் இணைத்தார் ;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் என்க்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் .-அந்த

ஆறுதல்களால் நிறைந்தேன் ,- அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்தேன் ;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாயத் தங்கப் பெற்றேன். -அந்த

அந்நாளில் வாக்குப் பண்ணினேன் ,-உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன் ;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பெலம தாராய், என்னையாட்கொண்ட தேவா

No comments:

Post a Comment