Wednesday, April 14, 2010

நல்லாவி ஊற்றும்

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான்தர நித்தம் துதிபாட
நல்லவி ஊற்றும் தேவா

பெந்தே கொஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேலையில் இறங்கிடுவீரே
விந்தை செய் வின் ஆவியாய்

மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டென்னையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே

ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேடப் பணியாற்றவும்

பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க

No comments:

Post a Comment