Monday, April 26, 2010

ஆர் இவர் ஆராரோ கீர்த்தனை 32

பல்லவி

ஆர் இவர் ஆராரோ -இந்த -அவனியோர் மாதிடமே

ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பால கனார்?

சரணங்கள்

பாருருவாகுமுன்னே -இருந்த -பரப் பொருள் தானிவரோ ?

சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுங் சிருட்டித்த மாவலரோ? -ஆர்

மேசியா இவர் தானோ? -நம்மை மேயத்திடும் நரர்கோனோ?

ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ ?-ஆர்

தித்திக்குந் தீங்கனியோ? -நமது -தேவனின் கண்மணியோ?

மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ ?- ஆர்

பட்டத்துத் துரைமகனோ ?-நம்மைப்-பண்புடன் ஆள்பவனோ?

கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?-ஆர்

ஜீவனின் அப்பமோதான்? -தாகம் -தீர்திடும்பானமோதான்?

ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர் தானோ? -ஆர்

No comments:

Post a Comment