Thursday, April 15, 2010

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இயேசுமா ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1 அற்புதமான அன்பே -என்னில்
பொற்பரன் பாராட்டும் தூயஅன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே. - தோத்திரம்

2.ஜோதியாய் வந்து அன்பே-பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்ய மதுர அன்பே - தோத்திரம் .

3.மாய உலக அன்பை- நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - தோத்திரம்

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னைப்போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே - தோத்திரம்

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - தோத்திரம்

No comments:

Post a Comment