Tuesday, April 20, 2010

ஆ! இன்ப கால மல்லோ கீர்த்தனை 209

பல்லவி

ஆ! இன்ப கால மல்லோ?-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ ?

அனுபல்லவி
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னை கொண்டேகிடும் - ஆ!

சரணங்கள்

துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன் - சோதனைகள் போக்கி ,
அம்பர வாசிகளோ - டிதயத்தை -இன்ப உறவாக்கி
கெம்பீரமாகாவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும் .- ஆ!

ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதினில் உற்று
தேவ நகர் கானுற்றுச் சடத்தை -ஜெகத்தில் எரிந்துவிட்டு,
ஆவிகளிப்புடன் ஆகாயஞ் செல்லவே ,
அன்பொடுபார்த்து நல வந்தனஞ் சொல்லுவேன்- ஆ!

No comments:

Post a Comment