Wednesday, April 14, 2010

எந்தன் நாவில் புது பாட்டு

எந்தன் நாவில் புது பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்- அல்லேலுயா

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்

வாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீடிட்டார் - ஆனந்தம்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ ரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்

இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்

No comments:

Post a Comment