Monday, April 26, 2010

ஐயனே உமது திருவடி களுக்கே கீர்த்தனை 277

ஐயனே!உமது திருவடிகளுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே !உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம் ?

சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்த்தரவணைத்தீரே ;
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

இருதயந் தனை நீ புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

நாவிழி செவியை , நாதனே , இந்த
நாளெல்லாம் நீர் காரும் .
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே, அருள்கூரும் .

கைகாலால் நான் பவம் புரி யாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே ,உம்மால் தான் எனதிதயம்
தூய்வழி செல்லும் .

ஊழியந் தனை நான் உண்மையாச் செய்ய
உதவி நீர் செய்வீரே .
ஏழை நான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே.

அத்தனே! உமது மகிமையை நோக்க ,
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் ,மெய்விசுவாசம் ,
தேவனே உமக்கேற்க.

இன்றும் என்மீட்ப்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும்.என் நாளைப்
பூவுலகில் கடத்த .

இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்.
தந்தையே ,நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும் .

No comments:

Post a Comment