Saturday, April 24, 2010

அனுக்ரக வார்தையோடே கீர்த்தனை 317

அனுக்ரக வார்த்தையோடே -இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.

நின்திரு நாமமதில் -கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.

தோத்திரம்,புகழ் ,மகிமை,-கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே;அதிசோபிதபரனே!
பாதசரண் ஆமென்!

No comments:

Post a Comment