Monday, April 26, 2010

ஆனந்தமே ஜெயா! ஜெயா! கீர்த்தனை 302

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

அனுபல்லவி
ஞானரட்சகர் நாதர் நமை-இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார்-புகழ்

சரணங்கள்

சங்க கணம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமி-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் -புகழ்

முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் -வெகு
தயவுடம் யேசு தற்காத்ததினால் -புகழ்

பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் .
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்

No comments:

Post a Comment