Thursday, April 15, 2010

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்
இயேசு ராஜா நம் சொந்தமாயினார்
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார் .

பல்லவி
ஆ ...ஆ ...ஆனந்தமே
பரமானந்தமே -இது மா பெரும் பாக்கியமே

2 .சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கொண்டுகொண்டார்
தமது ஜீவனை என்னாகும் அளித்து
ஜீவன் பெற்றுகொள் என்றுரைத்தார் - ஆ.. ஆ.. ஆனந்தமே

3 . எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காட்டுக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ.. ஆ..ஆனந்தமே

4 . அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பைக் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
அவர் சமுகமதில் அங்கே அவருடனே
ஆடிப் பாடியே மகிழ்ந்திடுவேன் . ஆ.. ஆ. ஆனந்தமே

No comments:

Post a Comment