Tuesday, April 20, 2010

சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா கீர்த்தனை 49

பல்லவி
சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா ,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பன்னினான் .- சர\

கற்றூணில் சேர்த்திருகக்கட்டி, வலுவாய்க்
காவலன் தன சேர்வை எல்லாம் கூடி அளித்தார்- சர

முள்ளின் முடி செய்தழுத்தி வள்ளல் எனவே
மூர்க்க முடனே தடிகொன் டார்க்க அடித்தார் - சர

கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் -சர

துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் ,
துன்னிய கைக்கோளை வாங்கி சென்னியில் போட்டார் .சர

முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே ,
முன்ன்வனைப் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் -சர

No comments:

Post a Comment