Monday, April 26, 2010

எந்நாளுமே துதிப்பாய் கீர்த்தனை 303

பல்லவி
எந்நாளு மேதுதிப்பாய் -என்னாத்துமாவே , நீ
எந்நாளு மேதுதிப்பாய் !

அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது-எந்நாளு

சரணங்கள்

பாவங்கள் எத்தனையோ-நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி -எந்நாளு

எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே ,
எத்தனையோ கிருபை?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் .-எந்நாளு

நன்மையாலுன் வாயை நிறைத்தாரே ,பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப் போல் பலங் கொண்டு
ஓங்கு இளமை போல் ஆகவே செய்தததால் -எந்நாளு

பூமிக்கும் வானத்துக்கும் -உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே ,சத்தியமே யிது-ennalu

மன்னிப்பு மாட்சிமையாம் -மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
என்னில் உன் பாவம் அகன்றதத்தூரமே-எந்நாளுமே

தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்;
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே .-எந்நாளு

No comments:

Post a Comment