Wednesday, April 28, 2010

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் ,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ,தோத்ரம் ,
ஏர்குணனே தோத்ரம்,அடியார்க் -கு
இறங்கிடுவாய் ,தோத்ரம்,மா தேவா

நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் ,
நித்தமு முமக்கடியார்களின் தோத்ரம் ,
ஆர் மணனே,தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம் ,மா நேசா,

ஜீவன் சுகம் ,பெலன் ,யாவுக்கும் தோத்ரம்,
தினம், தினமஅருள் நன்மைக்கவும் தோத்ரம்,
ஆவலுடன் தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம், மா நேசா .

ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம் ,
சாற்றுகிறோம் தோத்ரம்,உனது
தகுமன்புக்கே தோத்ரம், மாநேசா.

மாறாப் பூரண நேசா,தோத்ரம் ,
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம் ,
தாராய் துணை தோத்ரம் ,இந்தத்
தருணமே கொடு தோத்ரம் , மாநேசா .

No comments:

Post a Comment