Friday, April 23, 2010

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

இயேசுவை நாம் எங்கே காணலாம்?
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்?

அனுபல்லவி
பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலை நடுவே பார்க்க முடியுமா?

ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தை காணேனே
பாடுபடும் ஏழைநான் அழுது வாடினேனே -இயேசு

வானமதில் பவனிவரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியில் வீசும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிடமாட்டாயோ-இயேசு

கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
வின்னாரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என்முன்னே கர்த்தர் இயேசு நின்றார்- இயேசு

எழுதியவர் ஜி புஷ்பநாதன்

No comments:

Post a Comment