Friday, April 23, 2010

இயேசு நான் நிற்குங் கன்மலையே கீர்த்தனை 183

பல்லவி
இயேசு நான் நிற்குங் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே !

சரணங்கள்

இயேசுவின் நாமத்தின் மேலே-என்றான்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்,-நான்
ஏசுவின் நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்.- இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,- சற்றும்
உலையாத எனது நங்கூரம் அவரே .- இயேசு

பேரு வெள்ளம் ,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்ஞை,ஆணை, இரத்தம் என் காவல்;
இருதயத்தின் நிலை அசைய-அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே .-இயேசு

சோதியாய் அவர் வரும்போது - நான்
சுத்தனைத் தரிசித்தே அவரைப் போலாவேன்;
நீதியாம் ஆடை தரிப்பேன்,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்;-இயேசு

No comments:

Post a Comment