Thursday, April 15, 2010

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உத்தியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா என் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசிர்வத்திடும்

இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமமே
உம்மிலே தங்கிதரிக்க
ஊக்கமருளுமே

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாலும் நீர் ஏக ராஜனாய்
ஏற்ற வான்ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே

பூதல ஆசிர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்

1 comment:

  1. A few spelling mistakes corrected

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
    நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
    வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
    மேசியா என் மணவாளனே
    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசிர்வதித்திடும்

    இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
    உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
    உம்மிலே தங்கிதரிக்க
    ஊக்கமருளுமே

    ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
    பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் ஏக ராஜனாய்
    உற்ற வான்ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே

    பூதல ஆசிர்வாதத்தால் பூரணமாகவே
    ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க
    ஆ தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன்

    ReplyDelete