Monday, April 19, 2010

சித்தம் கலங்காதே ,பிள்ளையே ,கீர்த்தனை 158

பல்லவி
சித்தம் கலங்காதே ,பிள்ளையே ,
செய்வதெ னென்று .

சரணங்கள்

மெய்யனுக்குன் குறை சொல்லு
வேண்டியதடைந்து கொள்ளு,
துய்யனிடம் நீ செல்லு,
துற ஆசாபாசங்கள் வெல்லு .- சித்தம்

எங்கே நானேகுவே னென்று
ஏங்கித் தவிக்காதே நின்று,
துங்க னெல்ல்லாமுமே வென்று
சுகமளிப் பாரோ வென்று .- சித்தம்

பரலோக வாழ்வை நாடு
பரண் தயவை நீ தேடு,
தரை யினபம் விட்டுப் போடு ,
தகக் கவலை விட்டோடு .-சித்தம்

No comments:

Post a Comment