Saturday, April 24, 2010

ஆ! அம்பர உம்பர மும் கீர்த்தனை 33

பல்லவி

ஆ! அம்பர உம்பர மும் புகழ்ந்திரு

அதிபன் பிறந்தார் .

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் ,-அமலாதிபன் பிறந்தார்.- ஆ!

சரணங்கள்

அன்பான பரனே !-அருள் மேவுங் காரணனே -நவ

அச்சய சச்சித - ரட்சகனாகிய

உச்சித வரனே !- ஆ!

ஆதம் பவமற,-நீதம் நிறைவேற -அன்று

அல்லிராவினில் -தொல்லையிடையினில்

புல்லணையிற் பிறந்தார் .- ஆ!

ஞானியர் தேட, வானவர் பாட,-மிக

நன்னய ,உன்னத-பன்னரும் ஏசையா

இந்நிலம் பிறந்தார் .-ஆ!

கோனவர் நாட,- நானவர் கொண்டாட ,-என்று

கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே , யூத

கோத்திரன் பிறந்தார் .-ஆ!

விண்ணுடு தோண,- மன்னவர் பேண ,- ஏரோது

மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட

விந்தையாய்ப் பிறந்தார் .- ஆ!

No comments:

Post a Comment