Saturday, April 24, 2010

அதி மங்கல காரணனே கீர்த்தனை 22

பல்லவி
அதி மங்கல காரணனே , துதி -தங்கிய பூரணனே -நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்
மங்கின எங்களுக்கும், திதி சிங்கினர் தங்களுக்கும் -உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிட வையாய், துங்கவனே-அதி

முடி மன்னர்கள் மேடையும் ,மிகு -உன்னத வீடதையும் - நீங்கி
மாட்டிடையே பிறந்த தாட்டிடையர் தொழ வந்தனையோ தரையில்-அதி

தீய பேய்த் திரள் ஓடுதற்க்கும்,உம்பர் வாயத்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்புற்று வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ?


No comments:

Post a Comment