Wednesday, April 28, 2010

கிஞ்சிதமும் , நெஞ்சே , கீர்த்தனை 197

பல்லவி
கிஞ்சிதமும் , நெஞ்சே , அஞ்சிடாதே ;-நல்ல
கேடகத்தைப் பிடி நீ; -விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ .

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெயகின்ற வேலையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ -கிஞ்சித

பாவத்தை வெறுக்க,ஆபத்தைச் சகிக்க ,
பத்தியில் தெளிக்கவும்,-நித்ய
ஜீவனைப் பிடிக்க ,லோகத்தை ஜெயிக்க ,
திறமை அளிக்கவும் ,
சாவே,உன் கூர் எங்கே? பாதாளமே ,உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும் ,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல ஆயுதம் .-கிஞ்சித

பண்டையர் அந்த பரிசையினால் அல்லோ ,
கண்டைந்தார் பேறு?-நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும்;தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது ,மாம்பல
காரியங்களையும் பார்;இது மா ஜெயம் .- கிஞ்சித

ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் ;அதின்
தோற்றமும் முடிவும் எசுபரன் செயல்
துணை அவர் பாதம் ;
ஏற்றர வணைக்கவே,பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே ,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ.- கிஞ்சித

No comments:

Post a Comment